Design a site like this with WordPress.com
Get started

Penne VII !!!!!!! – Ninaivalaigal

அழகு என்னும் சொல்லுக்கு அர்த்தமானவள் நீ
அவ்வழகுக்கே அழகு சேர்க்கும் பேரழகு நீ
பார்க்க பார்க்க ரசிக்க தோனும் குட்டி தேவதை நீ
பேச பேச கதைக்க தோனும் சுட்டி குழந்தை நீ
பழக பழக உருக வைத்த என் தாயின் மறு உருவம் நீ
நிஜமாய் மாறிய என் கனவு நீ
மீண்டும் கனவாகவே மாறிய என் நிஜமும் நீ
என்னுடைய சந்தோஷமும் நீ
என்னுடைய சோகமும் நீ
என்னுடைய மொத்தமும் நீ
உன்னோடு உனக்காக நான் வாழ நினைத்தேன்
ஆனால் இன்றோ நான் எனக்காக உன் நினைவுகளோடு வாழ்கிறேன்

என்னிடம் உன்னை மறக்க சொன்னாய்
அதெப்படி சாத்தியம்
கடற்கரை அலையை தொட மறப்பது சாத்தியமானால்
நுரையீரல் மூச்சு விட மறப்பது சாத்தியமானால்
பூமி சூரியனை காண்பதை மறப்பது சாத்தியமானால்
நானும் உன்னை மறக்கிறேன்

உன் வாய் பேசிய வார்த்தைகள் புரிந்ததா தெரியவில்லை எனக்கு
ஆனால் உன் கண்கள் பேசிய வார்த்தைகள் பாய்ந்தது என் இதயத்தில்

பேசிக் கொண்டு இருந்தால் தான் காதல் என்பதல்ல
நினைத்துக் கொண்டு இருந்தாலும் காதல் தான்
உன்னை நினைத்து கொண்டே வாழ்வேன்
நட்சந்திரங்களனைத்தும் வானிலிருந்து கீழே விழும் வரை
சமுத்திரங்களனைத்தும் நீரின்றி வற்றிப்போகும் வரை
அதாவது என் வாழ்வின் இறுதி வரை

நான் இறந்து என் நினைவை இழந்தாலும்
உன் நினைவை இழக்க மாட்டேன்
ஒரு பொழுதும்

தனக்காக அழுத அவளையும்
தன்னை அழ வைத்த அவளையும்
ஆண் ஒரு போதும் மறக்க மாட்டான்
நானும் அப்பிறவியில் ஒன்றாகிவிட்டேனடி

உயிரே என் உயிர் ஏங்குதடி
எங்கே உன் உயிர் என தேடுதடி

மழையில் நனைகின்றேன்
வெயிலில் காய்கின்றேன்
ஆற்றில் குதிக்கின்றேன்
மலையில் ஏறுகின்றேன்
கடலில் மிதக்கின்றேன்
ஆனால் என் சிரிப்பை காணலடி
என் அழுகையும் என்னை விட்டு போகலடி

உன்னுடன் பேசாமல் வாழும் ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகங்களாய் ஆனதடி
யுகங்களை கடந்து வாழும்
பேரனுபவம் கொண்டேன் எல்லாம் உன்னாலடி

கடல் அலைகள் கொந்தளித்து கரைகளை வெள்ளமாக்குவதைப் போல்
உன் நினைவலைகள் என் கண்களை வெள்ளமாக்குதடி
கண் மூடினால் உன் பிம்பம் தெரியுதடி
கண் திறந்தால் உன் குரல் கேக்குதடி
என்னை கெத்து எனக் கூறிய உள்ளங்கள்
இன்றோ என்னை பித்து எனக் கூறுதடி
என்னை சடையன் எனக் கூறிய உள்ளங்கள்
இன்றோ என்னை மடையன் எனக் கூறுதடி

அன்றொரு நாள் என் கண் முன்னே வந்தாய்
உன் செவ்விதழ் கொண்டு புன்னகை தந்தாய்
என் விரல்கள் உன் முகத்தை வருடும் முன்பு
கனவாகி காற்றில் கலைந்தாய் அது ஏனோ

பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சியான என் இதயத்தில்
இன்று பட்டாம்பூச்சிகள் பட்டுப்பூச்சியாகும் மாயம் ஏனோ
மாநகரம் போல் இருந்த என் மனசு தனித்தீவாய் மாறியதேனோ
அத்தனித்தீவும் இன்று நாதியற்று அனாதயான மாயம் ஏனோ
நிலநடுக்கம் கொண்டு எழும் நிஜக்கடலினை விட
மனநடுக்கம் கொண்டு எழும் என் அகக்கடல் ஏற்படுத்தும் சேதம் அதிகமான மாயம் ஏனோ

எனக்கு உன் மீது துளியளவும் கோபம் இல்லை
என் கண்ணம்மா
உன் கண்களில் ஒரு துளி கண்ணீரும் வந்துவிடக்கூடாது என்ற பயம் தான் உண்டு

உன்னை இழந்ததால் வாடுகிறேனோ இல்லையோ
நான் என்னை இழந்து நிச்சயம் வாடுகிறேன்
என்னால் என்னை மீட்டெடுக்க முடியவில்லை
உன்னைக் காணும் முன் இருந்த என்னை நான் மறந்துவிட்டேன்
பிறர் கூறக் கேட்டும் அது நான் இல்லை என மறுத்துவிட்டேன்

ஆனால் ஒன்று
நீ தங்கிய என் இதய சிறைக்கு
வேறு கைதி இனி யாரும் இல்லை

Miss You so much My True Love !!

Advertisement

Published by @ The Emotional Ink !!

Aspiring Writer with an Emotional Heart who is basically asusual an Engineer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: